சீனாவில் திருக்குறள்!
தைவான் நாட்டு கவிஞர் யூ ஷிக்கு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாராட்டு விழா நடந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தலைமையில் நடந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக், டைம்ஸ் ஆப் இந்தியா ‘மெட்ரோ’ ஆசிரியர் அருண்ராம் உள்ளிட்டோர் யூ ஷியை வாழ்த்தி பேசினர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்:
"எனக்கு அண்ணா பல்கலைக் கழகம் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து, ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கு ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம். நேற்று மதியம் யூ ஷியுடம் பேசியபோது, திருக்குறளின் பெருமைகள், அதில் 133 அதிகாரங்களில், 1,330 குறள்கள் குறித்து தெரிவித்தேன். அப்போது யூ ஷி, நானே திருக்குறளை சீனமொழியில் மொழி பெயர்க்கிறேன் என தெரிவித்தார். யூ ஷி வரும் டிசம்பர் மாதத்திற்குள் திருக்குறளை சீனமொழியில் மொழி பெயர்க்கவுள்ளார்."
தைவான் கவிஞர் யூ ஷி, “இந்த அழகிய நாட்டில் இருக்கும்போது, என் இதயம் மென்மையாகிறது,” என்றார். தைவான் கவிஞருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்!
டாக்டர் அப்துல் கலாமின் கடிதம்.
ஒவ்வொரு இந்தியனுக்கும் டாக்டர்.அப்துல் கலாமின் கடிதம் என்ற தலைப்பில் பல முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட Email எனக்கும் வந்தது. கடிதத்தின் கடைசியில் அனைவருக்கும் தெரியப்படுத்தவும் என்று கோரிக்கையும் இருந்தது.கேள்விகள் பல என்னைச் செருப்பால் அடித்தன.வாசிக்கும்போது நான் சொல்வது விளங்கும். திரு.கலாம் எழுதியிருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பகிர்கிறேன். இனி அவரது வார்த்தைகள்:
ஏன் நமது ஆற்றலை அறிந்துகொள்ள மறுக்கிறோம்?
நம்நாடு சிறந்த நாடு. பல வெற்றிச் சரித்திரங்கள் நமக்குச் சொந்தம். இருந்தும் அவற்றை அடையாளம் காண மறுப்பது ஏன்?
Remote Sensing Satellite தொழில்நுட்பத்தில் சிறப்பாக இருக்கிறோம்.
Remote Sensing Satellite தொழில்நுட்பத்தில் சிறப்பாக இருக்கிறோம்.
பால் உற்பத்தியில் முதலிடம்.
அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் இரண்டாம் இடம்.
ஒருமுறை இஸ்ரேல் செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தபோது குண்டுவீச்சினால் விளைந்த சேதங்களும், உயிரிழப்புகளும் கண்ணில்பட்டது. ஆனால். முதல்பக்கத்தில், ஐந்து வருடங்களுக்குள் தங்கள் நாட்டை வளப்படுத்திய மனிதரைப் பற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது. உத்வேகம் தரும் இந்தச் செய்தியால் மற்ற சேதங்கள், உயிர்ப்பலிகள் காணாமல் போயின. நமது நாட்டில் நாம் ஏன் எப்போதும் மரணம், நோய், தீவிரவாதம், குற்றம் இவைகளையே வாசித்துக் கொண்டிருக்கிறோம்?
மற்றொரு கேள்வி: நாம் ஏன் வெளிநாட்டுப் பொருட்களின்மீது அதிக மோகம் கொண்டவர்களாக இருக்கிறோம்? வெளிநாட்டுத் தொலைக்காட்சி, தொழில்நுட்பம், ஆடைகள் இவற்றை அதிகம் விரும்புகிறோம். தன்னம்பிக்கையே சுயமரியாதைக்கான காரணம் என்பதை நாம் உணரவில்லையா?
ஹைதராபாத்தில் இந்தச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஒரு சிறுமி என்னிடம் கையெழுத்து கேட்டாள். நான் அவளிடம் உனது இலட்சியம் என்ன என்றேன். அவள், வளர்ந்த இந்தியாவில் வாழ ஆசைப்படுகிறேன்” என்றாள். அவளுக்காக நீங்களும், நாமும் இந்தியாவை வளப்படுத்த வேண்டும். நமது நாடு வளர்ச்சியில் குறைந்ததல்ல; மிகுந்தது என்று நாம் அறிவிக்க வேண்டும்.
பொதுவாக நீங்கள் சொல்வது :
அரசாங்கம் செயலற்றது.
சட்டங்கள் பழமையானது.
மாநகராட்சி குப்பைகளை ஒழுங்காக அள்ளுவதில்லை.
தொலைபேசிகள் சரிவர இயங்குவதில்லை.
ரயில்வே நகைப்புக்குரியது.
நமது விமானசேவை உலகிலேயே மட்டமானது.
கடிதங்கள் உரிய இடத்தை அடைவதில்லை.
நீங்கள் சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள் மேலும் சொல்கிறீர்கள். இவற்றை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன?
சிங்கப்பூர்வாசியாக உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்கு நீங்கள் உங்கள் சிகரெட்துண்டை சாலையில் எறிவதில்லை. அல்லது தெருக்களில் உணவருந்துவதில்லை. மாலை 5 மணி முதல் 8 மணி வரை Orchard Road செல்வதற்கு 5 டாலர் (தோராயமாக 60 ரூபாய்) தருகிறீர்கள். உணவகங்களில் ஒதுக்கப்பட்ட நேரத்தைவிடக் கூடுதல் நேரம் இருந்தால் பார்க்கிங்கில் கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்கள். சிங்கப்பூரில் நீங்கள் எதுவும் சொல்வதில்லை!
உங்களால் முடியுமா? நீங்கள் ரம்ஜான் தினத்தில், துபாயில் தெருக்களில் உணவருந்தத் துணிவதில்லை.
லண்டனில் தொலைபேசித்துறையில் பணிபுரியும் ஊழியருக்கு மாதம் 10 Pound லஞ்சம் தந்து எனது STD / ISD பில்லை வேறொருவருக்கு அனுப்பிவிடு என்று சொல்வதில்லை.
வாஷிங்டனில் 55 KM வேகத்துக்குமேல் சென்று போக்குவரத்துக் காவலரிடம் “நான் யாரென்று தெரியுமா? இன்னாரின் மகன். உனது லஞ்சத்தை வாங்கிக் கொண்டு வழிவிடு” என்று பேசுவதில்லை.
ஆஸ்திரேலியா அல்லது நியூஸிலாந்து கடற்கரைகளில் தேங்காயை அதற்குரிய தொட்டியில் போடாமல் கடற்கரையில் எறிவதில்லை.
ஏன் நீங்கள் டோக்கியோ தெருக்களில் புகையிலைத் துப்புவதில்லை?
பாஸ்டனில் நீங்கள் ஏன் போலிச் சான்றிதழ் வாங்க முயல்வதில்லை?
நாம் அதே ”நீங்களைப்” பற்றித்தான் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
வெளிநாட்டு விதிமுறைகளைப் பின்பற்றும் நீங்கள் சொந்த நாட்டில் செய்வதில்லை.இந்தியாவில் இறங்கியதும் குப்பைகளைத் தெருக்களில் வீசுகிறீர்கள். வெளிநாட்டில் விதிகளை முறையாகப் பின்பற்றி நன்மதிப்புமிக்க குடிமகனாகத் திகழும் நீங்கள் ஏன் நமது இந்தியாவில் அவ்வாறு இருப்பதில்லை?
அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டு பொறுப்புகளை மறந்துவிடுகிறோம். அரசே அனைத்தையும் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். தெருவில் இருக்கும் குப்பையைத் தொட்டியில் போடாமல் அரசே சுத்தம் செய்யக் காத்திருக்கிறோம். கழிவறையை முறையாகப் பயன்படுத்தாமல் ரயில்வே சிறந்த கழிவறை வசதி தரவேண்டும் என்கிறோம்.
பெண்கள் சார்ந்த சமூகப் பிரச்சனைகளில் வரதட்சணையைப் பற்றி நமது வீடுகளில் உரக்கப் பேசிவிட்டு எதிர்மறையாக நடந்து கொள்கிறோம். இந்த அமைப்பை மாற்றப் போவது யார்?
அமைப்பு என்பது என்ன? நம்மைப் பொறுத்தவரை பிறர், அடுத்த வீடுகள், மற்ற நகரங்கள், மற்ற சமுதாயங்கள் மற்றும் அரசாங்கம் என்பது நமது வசதியான கருத்து. ஆனால் நிச்சயமாக நீங்களோ, நானோ அல்ல. சமூகத்திற்கு நமது பங்களிப்பு என்று வரும்போது நாம் நமது குடும்பத்தோடு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு, எங்கோ தூரதேசத்திலிருந்து தூதுவன் வந்து யாவற்றையும் சரிசெய்வான் என்று நம்புகிறோம். அல்லது நாட்டைவிட்டு ஓடுகிறோம்.
அமெரிக்காவுக்கு ஓடி அவர்கள் அமைப்பைப் புகழ்கிறோம். நியூயார்க் பாதுகாப்பில்லாத போது இங்கிலாந்துக்கு ஓடுகிறோம். இங்கிலாந்தில் வேலைவாய்ப்பில்லாத போது மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறக்கிறோம். அங்கு போர் துவங்கினால், நம்மைப் பத்திரமாகக் காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கிறோம்.
ஒவ்வொருவரும் நாட்டைப் பழிக்கிறோம். இங்குள்ள அமைப்பை மேம்படுத்த யோசிப்பதில்லை. நமது மனசாட்சி பணத்திடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள இந்தியர்களே, இந்தக் கட்டுரை நமது மனசாட்சியைச் சோதிப்பதற்கான வாய்ப்பு.
ஜான் கென்னடியின் வார்த்தைகளை இந்தியாவிற்குப் பொருத்துகிறேன்.
'ASK WHAT WE CAN DO FOR INDIA AND DO WHAT HAS TO BE DONE TO MAKE INDIA WHAT AMERICA AND OTHER WESTERN COUNTRIES ARE TODAY'
இந்தியாவிற்கு என்ன தேவையோ அதை நாம் செய்வோம்!
நன்றி,
Dr.அப்துல் கலாம்.
பெண்கள் சார்ந்த சமூகப் பிரச்சனைகளில் வரதட்சணையைப் பற்றி நமது வீடுகளில் உரக்கப் பேசிவிட்டு எதிர்மறையாக நடந்து கொள்கிறோம். இந்த அமைப்பை மாற்றப் போவது யார்?
அமைப்பு என்பது என்ன? நம்மைப் பொறுத்தவரை பிறர், அடுத்த வீடுகள், மற்ற நகரங்கள், மற்ற சமுதாயங்கள் மற்றும் அரசாங்கம் என்பது நமது வசதியான கருத்து. ஆனால் நிச்சயமாக நீங்களோ, நானோ அல்ல. சமூகத்திற்கு நமது பங்களிப்பு என்று வரும்போது நாம் நமது குடும்பத்தோடு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு, எங்கோ தூரதேசத்திலிருந்து தூதுவன் வந்து யாவற்றையும் சரிசெய்வான் என்று நம்புகிறோம். அல்லது நாட்டைவிட்டு ஓடுகிறோம்.
அமெரிக்காவுக்கு ஓடி அவர்கள் அமைப்பைப் புகழ்கிறோம். நியூயார்க் பாதுகாப்பில்லாத போது இங்கிலாந்துக்கு ஓடுகிறோம். இங்கிலாந்தில் வேலைவாய்ப்பில்லாத போது மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறக்கிறோம். அங்கு போர் துவங்கினால், நம்மைப் பத்திரமாகக் காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கிறோம்.
ஒவ்வொருவரும் நாட்டைப் பழிக்கிறோம். இங்குள்ள அமைப்பை மேம்படுத்த யோசிப்பதில்லை. நமது மனசாட்சி பணத்திடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள இந்தியர்களே, இந்தக் கட்டுரை நமது மனசாட்சியைச் சோதிப்பதற்கான வாய்ப்பு.
ஜான் கென்னடியின் வார்த்தைகளை இந்தியாவிற்குப் பொருத்துகிறேன்.
'ASK WHAT WE CAN DO FOR INDIA AND DO WHAT HAS TO BE DONE TO MAKE INDIA WHAT AMERICA AND OTHER WESTERN COUNTRIES ARE TODAY'
இந்தியாவிற்கு என்ன தேவையோ அதை நாம் செய்வோம்!
நன்றி,
Dr.அப்துல் கலாம்.
கருத்துக்களின் அக்கறையும்,நேர்மையும் திரு.அப்துல் கலாமுடையது. மொழிமாற்றத்தில் ஏதேனும் கருத்துப்பிழையோ, சொற்பிழையோ இருந்தால் முழுக்க முழுக்க என்னுடையது. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தேசமுன்னேற்றத்தைத் தொடர்ந்து சிந்திக்கும் திரு.அப்துல் கலாம் போன்றவர்கள் அரிதானவர்கள்.
அப்துல் கலாமையே.....!
” உங்கள் ஷூக்களை கழட்டுங்கள்”
கழட்டுகிறார்.
” ஆடைகளைக் கழட்டுங்கள்”
புன்னகையுடன் ஒத்துழைக்கிறார்.
சாதாரணக் குடிமகனைக்கூடக் கோபப்படுத்தும் நிகழ்வு. முன்னாள் முதல் குடிமகன், பாரத ரத்னா, டாக்டர்.அப்துல் கலாம் மேலே சொன்னவற்றைப் புன்னகை மாறாமல் செய்திருக்கிறார். இடம்: டெல்லி விமான நிலையம்.
நடந்தது நியூயார்க்கில் அல்ல நண்பர்களே! டெல்லியில். பாராளுமன்றம் கண்டித்திருக்கிறது. Continental Airlines மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
”எங்களது விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனைகள். டாக்டர்.கலாமையோ, இந்திய மக்களின் நம்பிக்கைகளையோ புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. எங்கள் தரப்பிலிருந்து மன்னிப்பு கேட்டு விட்டோம். வருங்காலத்தில் எங்கள் விமான சேவையைப் பயன்படுத்துவார் என நம்புகிறோம்” - Continental Airlines.
விருந்துக்கு அழைத்து விஷம் வைத்தது போன்ற செய்கை. இதில் மன்னிப்பு கேட்கிறார்களாம்! அமெரிக்கக் குரூரங்கள் குறைவதில்லை! தேசம் பெரிதும் மதித்துப் போற்றும் மனிதருக்கே இந்த நிலை! சரிந்தது பொருளாதாரம் மட்டுமல்ல; அறிவும்தான் என அடிக்கடி நிரூபிக்கிறார்கள்.
சோதித்த ஊழியர்களைப் பதவிநீக்கம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் முறையான நடவடிக்கை. செய்வார்களா? இதுபோன்ற முட்டாள்தனங்கள் தொடர்ந்தால் அமெரிக்கா இன்னும் இன்னும் இழப்புகளைச் சந்திக்கும்!
ஊழலற்ற இந்தியா - டாக்டர் அப்துல் கலாம்
புதிய வகுப்பறைகளின் திறப்புவிழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் சமீபத்தில் நடந்தது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்துகொண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.
”நான் குடியரசுத் தலைவராக இருந்தபோதும், இப்போது இந்தியாவிலோ அல்லது அயல்நாடுகளுக்கோ செல்லும்போதும் பள்ளிக்கூடத்திற்கு சென்று மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். வகுப்பறைகள் மாணவ-மாணவிகளை ஈர்க்கும் வகையிலும் படைப்பாற்றலை தூண்டும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஆர்வத்தோடு பள்ளிக்கூடத்திற்கு வருவார்கள்.
ஆசிரியர் பணியை விரும்பி செய்யக்கூடிய நபர்கள் ஆசிரியர் வேலைக்கு வர வேண்டும். ஒரு மாணவனை நல்ல முறையில் உருவாக்குவதில் பெற்றோருக்கும், தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கும் பெரும் பங்கு உண்டு. மாணவர்கள் ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்காக கடுமையாக உழைத்தால் நிச்சயம் குறிக்கோளை அடைய முடியும். அதை நினைத்து கனவு காண வேண்டும்.
இப்போது நானும் ஒரு கனவு காண்கிறேன். கிராமப்புறம்-நகர்ப்புறம் என்ற பாகுபாடு இல்லாத இந்தியாவை, அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவ வசதி கிடைக்கக்கூடிய இந்தியாவை, லஞ்சமும், ஊழலும் இல்லாத இந்தியாவை, வெளிப்படையான அரசு நிர்வாகம் நடக்கக்கூடிய இந்தியாவை, தீவிரவாதம் இல்லாத இந்தியாவை காண வேண்டும் என்று கனவு காண்கிறேன்.
இவை எல்லாம் நடக்கக்கூடிய காரியமா? என்று கேள்வி எழலாம். கண்டிப்பாக நடக்கும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால், அதற்கேற்ப செயல்பட்டால் நிச்சயம் சாத்தியம்தான். "
அப்துல்கலாமைச் சந்திக்கலாம்...
Missile Man of India , டாக்டர்.அப்துல் கலாமைச் சந்திக்க அருமையான வாய்ப்பு. Times Avenue வில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திரு,கலாம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை குறித்து வழிகாட்ட இருக்கிறார்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
Chinmaya Heritage Centre,
Harrington Road, Chetpet,
Chennai.
நாள் : 22.06.2009
பதிவு செய்துகொள்ள 58888 என்ற எண்ணுக்கு toich (your name) என SMS செய்யவும்.
அறிவே சக்தி என்பதை மையமாகக் கொண்ட திரு.கலாமின் உரை மாணவர்களுக்காக. 21 ஆம் நூற்றாண்டு மாணவர்கள் தங்களின் துறைகளில் சிறக்க வேண்டும் என்பதே அவர் கனவு. மேலும், தனது முதன்மைக் கனவான இந்தியா 2020 குறித்தும் உரை நிகழ்த்துவார்.
இன்னும் பல பிரபலங்கள் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்த உள்ளனர். நமக்குப் பிடித்த பகுதிகளில் கலந்து கொள்ளலாம். (நல்லவேளையாக அனைத்தையும் கேட்கவேண்டியதில்லை.) SMS அனுப்பிப் பதிவுசெய்வது அவசியம். முதலில் அனுப்புபவர்களுக்கே முன்னுரிமை. விரைந்து செயலாற்றுங்கள்.
இன்னும் பல பிரபலங்கள் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்த உள்ளனர். நமக்குப் பிடித்த பகுதிகளில் கலந்து கொள்ளலாம். (நல்லவேளையாக அனைத்தையும் கேட்கவேண்டியதில்லை.) SMS அனுப்பிப் பதிவுசெய்வது அவசியம். முதலில் அனுப்புபவர்களுக்கே முன்னுரிமை. விரைந்து செயலாற்றுங்கள்.
அப்துல்கலாமுக்கு அயர்லாந்து விருது...!
வடக்கு அயர்லாந்து, பெல்ஃபாஸ்ட் (Belfast) நகரில் உள்ள குயீன்ஸ் பல்கலைக்கழகம் முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டல்.அப்துல்கலாம் அவர்க்ளுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. 10.06.2009 அன்று நடைபெற்ற விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பீட்டர் கிரெக்சன் பட்டத்தை வழங்கினார்.
உலக அளவில் அறிவியல் கல்வியைப் பரப்பும் சிறந்த கல்வியாளராகவும், இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் இளைஞர்கள் மத்தியில் தொலைநோக்குச் சிந்தனையை ஊக்குவிக்கும் தலைவராகவும் கலாம் விளங்குவதாக பீட்டர் கிரெக்சன் புகழாரம் சூட்டினார். திரு.கலாமின் முயற்சிகள் அங்கீகரிக்கப்படுவதில் பெருமையும், மகிழ்ச்சியும்!
மீண்டும் டாக்டர் அப்துல் கலாம்
குற்றங்களில் ஈடுபடுவோரையும், குற்றத்துக்குக் காரணமானவர்களையும் கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்று நமது முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மேலும் கூறியதாவது:
ஐக்கிய நாடுகள் அமைப்பு, தீவிரவாதத்துக்கெதிரான படையினை ஏற்படுத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார். அந்தப் படை, தீவிரவாத முகாம்களை அழிக்கும் நோக்கில் இயங்க வேண்டும். இந்தியாவிற்கெதிராகத் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர், சுதந்திரமாக விடப்படக் கூடாது. நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மும்பைத் தாக்குதலுக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட National Investigation Agency Act (NIA) மற்றும் Unlawful Activities Prevention Amendment (UAPA) ஆகியவை நல்ல ஆரம்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கலாம் அவர்கள் அரசாங்கத்திடம் National Campaign to Eradicate Terrorism (NCET) என்ற மசோதாவைக் அமல்படுத்தக் கோரியுள்ளார். NCET யின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட புலனாய்வு அமைப்பை ஏற்படுத்த முடியும்.
மத்திய, மாநில அரசாங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட இத்தகைய அமைப்பு உறுதுணையாக இருக்கும். நிர்வாக மற்றும் ஆயுத வசதிகளும் முறைப்படுத்தப்படும் என்பது கலாம் அவர்களின் கருத்து.
சாதாரண மனிதனின் வார்த்தைகளென்றால், புறந்தள்ளிவிடலாம். இந்திய அரசாங்கத்தின் பல்வேறு முக்கியமான துறைகளில் திறம்படப் பணியாற்றிய முன்னாள் முதல் குடிமகனின் வார்த்தைகளையும் அலட்சியப்படுத்திவிடக் கூடாது. நமது தேசத்தின் மீது அவருக்கிருக்கும் மரியாதையும், அக்கறையும் மதிக்கப்பட வேண்டும்.
டாக்டர் அப்துல் கலாமுக்கு விருது
பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற டாக்டர். அப்துல் கலாம் அவர்களுக்கு மற்றும் ஒரு விருது தேடி வருகிறது. கலாம் அவர்கள், அமெரிக்க நிறுவனம் வழங்கும் ஹூவர் மெடல் (Hoover Medal) என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1930 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. ஆண்டுக்கு ஒரு சிறந்த சாதனையாளரைத் தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தி வருகிறது. அவ்வகையில், 2008 ஆம் ஆண்டுக்கான விருது, நமது முன்னாள் குடியரசுத் தலைவருக்கு!
ஹூவர் மெடல்:
தலைசிறந்த சாதனைகளும், பொதுச்சேவையும் புரிந்துள்ள பொறியியல் வல்லுனர்களுக்கு வழங்கப்படும் விருது. இது அமெரிக்கப் பொறியியல் துறை விருது. American Society of Mechanical Engineers நிர்வாகப் பொறுப்பையும், American Institute of Chemical Engineers, American Institute of Mining, Metallurgical, and Petroleum Engineers, American Society of Civil Engineers, Institute of Electrical and Electronics Engineers, and American Society of Mechanical Engineers ஆகிய அமைப்புகள் இணைந்து வழங்குகின்றன. ( அதிகமான ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்).
திரு. அப்துல் கலாம் அவர்கள், மிகச்சிறந்த பொதுச்சேவை ஆற்றியதற்காகக் கௌரவிக்கப்படுகிறார். நியூயார்க் நகரில் ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில், திரு. கலாம் கௌரவிக்கப்படுவார். இந்தியா பெருமிதம் கொள்கிறது.
கலாமின் கட்டளைகள்
முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் அப்துல் கலாம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயல்திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த தனது கருத்தை India Vision Group என்ற அமைப்பு நடத்திய ” Celebrate Democracy - Vote India" நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வருங்கால உறுப்பினர்களுக்குக் கலாமின் பரிந்துரைகள்:
1. தொகுதியில் உள்ள குடிமக்களின் சராசரி ஆண்டு வருமானத்தைப் பெருக்க வழிவகை செய்ய வேண்டும்.
2. இப்போதுள்ள எழுத்தறிவு விகிதம், இன்னும் 20 சதவிகிதமாவது உயர்த்தப்பட வேண்டும்.
3. நீர்நிலைகள் குறித்த புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு, நதிகள் இணைப்பு குறித்த முழுமையான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
4.தொகுதியில் வேலை வாய்ப்பு அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
வருங்காலப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கலாம் அவர்களின் பரிந்துரைகள் அல்லது அன்புக்கட்டளைகள். நம்மைப் போல அவரும் நல்லது நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எம்.பிக்களே ! காதில் விழுகிறதா?
அப்துல் கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்துல் கலாமின் தோலில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக நேற்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்துல் கலாமின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவ வல்லுனர்கள் குழு ஒன்று அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவை கூறின.
எனினும், கலாம் எப்போது வீடு திரும்புவார் என்ற விவரத்தைத் தெரிவிக்க டாக்டர்கள் மறுத்துவிட்டனர்.