மெரினா கடற்கரை - சென்னை
எனது நினைத்தாலே இனிக்கும் பட்டியலில் முதலி்டம் வகிப்பது மெரினா. Ocean Beach, San Francisco, California, விற்கு அடுத்தபடி உலகின் இரண்டாம் பெரிய கடற்கரை. 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. வடக்கில் ஜார்ஜ் கோட்டையிலிருந்து துவங்கும் கடற்கரை தெற்கில் பெசன்ட் நகர் வரை நீள்கிறது. சென்னையின் அழகான கடற்கரைகளில் ஒன்று. (இன்னும் முறையாகப் பராமரித்தால்!) அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நாம் உறுதுணையாய் இருந்தால் நலம்.
கண்ணகி, மகாத்மா காந்தி, பாரதிதாசன், திருவள்ளுவர் உள்ளிட்ட தேசத்துக்குப் பெருமை சேர்த்த மாமனிதர்களுக்கு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழறிஞர் முதல் திரைக்கலைஞர் வரை பல்வேறு சாதனையாளர்கள் சிலைகளாக நம்மை வரவேற்கிறார்கள். உழைப்பளர் சிலை, சிறப்பான வேலைப்பாடு. முன்னாள் முதலவர்கள் திரு.எம்.ஜி.ஆர் மற்றும் திரு. அண்ணாதுரை ஆகியோரின் சமாதிகள் என்றும் மக்களை ஈர்ப்பன.
சென்னைப் பல்கலைக்கழகம், ஐஸ் ஹவுஸ், பிரஸிடென்ஸிக் கல்லூரி, பொதுப்பணித்துறைக் கட்டிடம் ஆகியவை கடற்கரைச் சாலைக்கு எழில் சேர்ப்பவை. வாக்கிங் முதியவர்கள், நடைபழகும் குழந்தைகள், கலைந்த கூந்தல் கன்னிகள், கடும் கோடையிலும் மணல்வெளிக் காதலர்கள் மற்றும் காகங்கள் மெரினாவின் பரபரப்புக்குக் காரணம்.
சென்னையில் எவ்வளவோ இடங்கள் இருப்பினும் அனைத்து மக்களின் விருப்பமும் மெரினா. சென்னையின் நீளமான, நிரந்தரமான அடையாளம். Download As PDF