தங்க மங்கை..!
இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சாவந்த், உலகத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.ஜெர்மெனியின் உள்ள முனிச் நகரில் நடந்து வரும் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் புரோன் பிரிவில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சாவந்த் 600-க்கு 597 புள்ளிகள் (100,100,100,99,99,99) குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 29 வயதான தேஜஸ்வினி சாவந்த், 1998-ம் ஆண்டில் ரஷிய வீராங்கனை மரினா போப்கோவா 597 புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்த ஸ்கோரை ஞாயிற்றுக்கிழமை சமன் செய்தார்.
சாதனை குறித்து தேஜஸ்வினி சாவந்த் "எனது சிறப்பான திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். பதக்கம் வெல்வேன் என்றோ, உலக சாதனை படைப்பேன் என்றோ நினைத்து கூட பார்க்கவில்லை.
இரண்டும் ஒரு சேர கிடைத்து இருப்பது பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த உணர்ச்சியை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் இல்லை. எனது பயிற்சியாளர்கள் சில திட்டங்களை வகுத்து கொடுத்தனர். அதன்படி எல்லாம் திட்டமிட்டபடி நடந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காமன்வெல்த் போட்டிக்கான நான் நீண்டகாலமாக தயாராகி வருகிறேன். இந்த வெற்றி எனது நம்பிக்கையை அதிகரிக்கும்".
வாழ்த்துக்கள் தேஜஸ்வினி!
சச்சின் 169...!
சச்சினின் 169 ஆவது டெஸ்ட். ஸ்டீவ் வாஹ் சாதனை தகர்ப்பு. தன் 21 வருடக் கிரிக்கெட்டில் சச்சின் விளையாடாதது 14 டெஸ்ட் மட்டுமே. 1971 க்குப் பிறகு விளையாடியவர்களில் சச்சினின் Career நீ.......ளமானது. உலக அளவில் 11 ஆவது பெரிய Career!
தனது பயணம் குறித்து சச்சின்!
”இந்த இடத்திற்கு வருவதற்கு எனக்கு 20 ஆண்டுகள் ஆனது. மிக நீண்ட பயணம். முதல் போட்டியில் ஆடியதை இன்றும் மறக்க முடியாது. கிரிக்கெட்டில் இவ்வளவு தூரம் பயணிக்க முடிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் அதிகம் நடப்பது மகிழ்ச்சி. கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவு டெஸ்ட் விளையாடியிருக்கிறோம். 90 களின் ஆரம்பத்தில் வருடத்திற்கு 2 அல்லது 3 டெஸ்ட்தான் விளையாடினேன். அது மட்டும்தான் ஏமாற்றம். அந்த நிலை இப்போது இல்லை!
நான் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகக் கடந்துவிட்டது வருடங்கள்! நேரம் பறக்கிறது. நாம் எப்போதும் உச்சத்தில் இருக்க முடியாது. சில சறுக்கல்கள் இருக்கும். அப்போதெல்லாம நான் பின்பற்றுவது ஒன்றுதான். இன்னும் கடினமாக உழைப்பது!
போட்டிக்குத் தயாராவது மிக முக்கியம். நான் இந்த விஷயத்தில் எப்போது்ம் தயார்படுத்திக் கொள்வதாகக் கருதுகிறேன். என்னால் சில நேரங்களில் வெற்றி கிடைக்கும்; கிடைக்காமல் போகும். ஆனால் நான் தயாராவதில் அதே அக்கறையுடன் இருக்கிறேன்!”
நன்றி சச்சின்! இத்தனை வருடங்களாக இந்தியாவை மகிழ்விப்பதற்கு...!
நன்றி சச்சின்! இத்தனை வருடங்களாக இந்தியாவை மகிழ்விப்பதற்கு...!
சச்சின் 169...!
Posted by : ஸ்ரீ.... | 5 August 2010 | Published in விளையாட்டு
சச்சினின் 169 ஆவது டெஸ்ட். ஸ்டீவ் வாஹ் சாதனை தகர்ப்பு. தன் 21 வருடக் கிரிக்கெட்டில் சச்சின் விளையாடாதது 14 டெஸ்ட் மட்டுமே. 1971 க்குப் பிறகு விளையாடியவர்களில் சச்சினின் Career நீ.......ளமானது. உலக அளவில் 11 ஆவது பெரிய Career!
தனது பயணம் குறித்து சச்சின்!
”இந்த இடத்திற்கு வருவதற்கு எனக்கு 20 ஆண்டுகள் ஆனது. மிக நீண்ட பயணம். முதல் போட்டியில் ஆடியதை இன்றும் மறக்க முடியாது. கிரிக்கெட்டில் இவ்வளவு தூரம் பயணிக்க முடிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் அதிகம் நடப்பது மகிழ்ச்சி. கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவு டெஸ்ட் விளையாடியிருக்கிறோம். 90 களின் ஆரம்பத்தில் வருடத்திற்கு 2 அல்லது 3 டெஸ்ட்தான் விளையாடினேன். அது மட்டும்தான் ஏமாற்றம். அந்த நிலை இப்போது இல்லை!
நான் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகக் கடந்துவிட்டது வருடங்கள்! நேரம் பறக்கிறது. நாம் எப்போதும் உச்சத்தில் இருக்க முடியாது. சில சறுக்கல்கள் இருக்கும். அப்போதெல்லாம நான் பின்பற்றுவது ஒன்றுதான். இன்னும் கடினமாக உழைப்பது!
போட்டிக்குத் தயாராவது மிக முக்கியம். நான் இந்த விஷயத்தில் எப்போது்ம் தயார்படுத்திக் கொள்வதாகக் கருதுகிறேன். என்னால் சில நேரங்களில் வெற்றி கிடைக்கும்; கிடைக்காமல் போகும். ஆனால் நான் தயாராவதில் அதே அக்கறையுடன் இருக்கிறேன்!”
நன்றி சச்சின்! இத்தனை வருடங்களாக இந்தியாவை மகிழ்விப்பதற்கு...!
நன்றி சச்சின்! இத்தனை வருடங்களாக இந்தியாவை மகிழ்விப்பதற்கு...!
சச்சின் 169...!
Posted by : ஸ்ரீ.... | 5 August 2010 | Published in விளையாட்டு
சச்சினின் 169 ஆவது டெஸ்ட். ஸ்டீவ் வாஹ் சாதனை தகர்ப்பு. தன் 21 வருடக் கிரிக்கெட்டில் சச்சின் விளையாடாதது 14 டெஸ்ட் மட்டுமே. 1971 க்குப் பிறகு விளையாடியவர்களில் சச்சினின் Career நீ.......ளமானது. உலக அளவில் 11 ஆவது பெரிய Career!
தனது பயணம் குறித்து சச்சின்!
”இந்த இடத்திற்கு வருவதற்கு எனக்கு 20 ஆண்டுகள் ஆனது. மிக நீண்ட பயணம். முதல் போட்டியில் ஆடியதை இன்றும் மறக்க முடியாது. கிரிக்கெட்டில் இவ்வளவு தூரம் பயணிக்க முடிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் அதிகம் நடப்பது மகிழ்ச்சி. கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவு டெஸ்ட் விளையாடியிருக்கிறோம். 90 களின் ஆரம்பத்தில் வருடத்திற்கு 2 அல்லது 3 டெஸ்ட்தான் விளையாடினேன். அது மட்டும்தான் ஏமாற்றம். அந்த நிலை இப்போது இல்லை!
நான் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகக் கடந்துவிட்டது வருடங்கள்! நேரம் பறக்கிறது. நாம் எப்போதும் உச்சத்தில் இருக்க முடியாது. சில சறுக்கல்கள் இருக்கும். அப்போதெல்லாம நான் பின்பற்றுவது ஒன்றுதான். இன்னும் கடினமாக உழைப்பது!
போட்டிக்குத் தயாராவது மிக முக்கியம். நான் இந்த விஷயத்தில் எப்போது்ம் தயார்படுத்திக் கொள்வதாகக் கருதுகிறேன். என்னால் சில நேரங்களில் வெற்றி கிடைக்கும்; கிடைக்காமல் போகும். ஆனால் நான் தயாராவதில் அதே அக்கறையுடன் இருக்கிறேன்!”
நன்றி சச்சின்! இத்தனை வருடங்களாக இந்தியாவை மகிழ்விப்பதற்கு...!

நன்றி சச்சின்! இத்தனை வருடங்களாக இந்தியாவை மகிழ்விப்பதற்கு...!

முத்தையா முரளிதரன் - பந்துவீசும் எந்திரம்!
முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பீரமாக டெஸ்ட் வரலாற்றை நிறைவு செய்திருக்கிறார். சுழல்பந்து எந்திரம் ஓய்வு கொள்கிறது. இன்னொரு முரளி, கிரிக்கெட்டுக்குக் கிடைப்பாரா?
விக்கெட்டோ, சிக்ஸரோ புன்னகை மாறாத முகம், உணர்வைச் சொல்லும் கண்கள், எதிரணியினரின் திறனையும் மதித்துப் பாராட்டும் Sportsmanship இவை முரளியின் அடையாளங்கள்.
20 வயதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் டெஸ்ட். (1992) 3 விக்கெட்டுகள்.
அடுத்த வருடத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் 5 விக்கெட் சாதனை.
நியூஸிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட்களில் 19 விக்கெட்டுகள். இலங்கை தொடரை வென்றது. முரளிதரன் முக்கியமான பௌலரான காலம் இதுதான்!
1997 - 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இலங்கை வீரர். ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகள்.
அதே வருடத்தில் ஓவலில் இங்கிலாந்தைத் தனியாளாகத் தாக்கினார் முரளி. 220 ரன்கள் கொடுத்து 16 விக்கெட்டுகள்!
2004 - இளம் வயதில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய பெருமை. 2007 வரை வார்னே, முரளிக்கிடையே அதிக விக்கெட்டுகள் சாதனை ஊசலாடியது. இறுதியில் வென்றவர் முரளி!
டிசம்பர் 2007 முதல் முரளிதரனே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர். வார்னேவின் 708 விக்கெட்டுகளை முறியடித்தார்.
2009 ல் வாசிம் அக்ரமின் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் என்ற சாதனையும் முரளியால் தகர்க்கப்பட்டது.
ஜூலை 22, 2010 - தனது கடைசி டெஸ்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையுடன் விடைபெறுகிறார். இந்தச் சாதனையை முறியடிக்க முடியாது என்று கருதுகிறார்கள் நிபுணர்கள்.
தோல்வியையும் மறந்து இந்திய வீரர்கள் முரளியின் சாதனைக்கு எழுந்து நின்று மரியாதை செய்தது நிறைவாக இருந்தது. முரளி! உங்களுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்!
தோல்வியையும் மறந்து இந்திய வீரர்கள் முரளியின் சாதனைக்கு எழுந்து நின்று மரியாதை செய்தது நிறைவாக இருந்தது. முரளி! உங்களுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்!
ஸ்பெயினுக்கு வாழ்த்துக்கள்!
ஒரு மாதத்துக்கும் மேல் உதைக்கப்பட்ட கால்பந்துக்கு ஓய்வு. ஸ்பெயின் 2010 சாம்பியன். முதல் முறை கால்பந்து உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு வாழ்த்துக்கள்! நெதர்லாந்து அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக ஆடியது, இறுதிப் போட்டியைத் தவிர!
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் வாய்ப்புக்களைச் சிந்தின. இரண்டாம் பாதியில், கூடுதல் நேரத்தில் இனியெஸ்டா கோல் அடித்துக் கோப்பையை ஸ்பெயினுக்குப் பெற்றுத் தந்தார். ஆட்ட நாயகனும் அவரே!
தென்னாப்பிரிக்கா போட்டிகளை சிறப்பாக நடத்தியிருக்கிறது. ரசிகர்களுக்குப் போட்டிகள் முடிந்ததில் வருத்தமிருக்கும். அடுத்த உலகக் கோப்பையிலாவது 100 கோடி மக்களுக்கு மேல் வாழும் இந்தியத் திருநாட்டிலிருந்து 15 வீரர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் ஸ்பெயினுக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்!
உலகக்கோப்பை இறுதி ஆட்டமே லட்சியம் - டெண்டுல்கர்
நாங்கள் 50 ஆவது மாடிக்குத் தாவப்போவதில்லை! முதலிலிருந்துதான் துவங்குவோம்.
உலகக்கோப்பை என்னைப் பொறுத்தவரை ஒரு செயல்திட்டம்.
படிப்படியாக இறுதி ஆட்டத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
இது நமது கனவு. என் கனவு மட்டுமல்ல! மொத்த தேசத்தின் கனவு.
மும்பை இறுதி ஆட்டத்தில் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்க வேண்டும்.
நமது திறமையை முழுமையாகப் பயன்படுத்தினால் கனவு மெய்ப்படும்!
- சச்சின்
உலகக்கோப்பை என்னைப் பொறுத்தவரை ஒரு செயல்திட்டம்.
படிப்படியாக இறுதி ஆட்டத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
இது நமது கனவு. என் கனவு மட்டுமல்ல! மொத்த தேசத்தின் கனவு.
மும்பை இறுதி ஆட்டத்தில் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்க வேண்டும்.
நமது திறமையை முழுமையாகப் பயன்படுத்தினால் கனவு மெய்ப்படும்!
- சச்சின்
கால்பந்துத் திருவிழா ஆரம்பம்!
தென்னாப்பிரிக்கா - 32 அணிகள் - 64 போட்டிகள் - 19 ஆவது கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகள் இன்று முதல் ஆரம்பம். 32 அணிகளிலிருந்து புள்ளிகளில் முதல் 16 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு செல்லும். அதிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்கு! 4 அணிகள் அரையிறுதிக்குச் செல்லும். இறுதியாக 2 அணிகள் ஃபைனலுக்கு! ஆட்டம் ஆரம்பம்!
பள்ளி நாட்களில் கால்பந்துப் போட்டிகளில் ஆர்வம் அதிகமிருந்தது. சிறிய உருவத்துக்குச் சரிவராத ஆட்டம் என்று சிலகாலத்திலேயே புரிந்தது. அதனால் கிரிக்கெட்டுக்குத் தாவினேன். தமிழகம் சிறந்த கால்பந்து வீரரை இழந்தது! இந்த உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்று எனக்குக் கணிக்கத் தெரியவில்லை. நண்பர்கள் பலர் இங்கிலாந்து, அர்ஜெண்டினா, ஜெர்மனி என்கிறார்கள். கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும்.
இந்தியா எந்த உலகக்கோப்பைக்குத் தகுதிபெறப்போகிறது? அதுவரை எனக்கு இந்தக் கோப்பைகளும், கொண்டாட்டங்களும் இரண்டாம்பட்சமே! முயற்சியும், ஆர்வமும், ஒத்துழைப்பும் இருந்தால் இந்திய வீரர்கள் சாதிப்பார்கள். அதுவரை நீண்ட பெருமூச்சோடு தென்னாப்பிரிக்கப் போட்டிகளை ரசிப்போம். அனைத்து அணிக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி ஆனந்த்!
இந்தத் தமிழனைச் சந்தித்தால் நிச்சயம் ஆயிரம் நன்றிகள் சொல்வேன். விஸ்வநாதன் ஆனந்த், உலகின் சதுரங்கச் சக்கரவர்த்தி. தமிழனின் அறிவாற்றலை உலகின் வெளிச்சத்துக்குக் கொணர்ந்த, அடக்கம் நிரம்பிய சாதனையாளர்.
பல்கேரியாவில், மீண்டும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்றிருக்கிறார் ஆனந்த். 12 சுற்றுகள் ஆனந்த், தபலோவ் ஆளுக்கு 5.5 புள்ளிகள். 12 ஆவது ஆட்டத்தில் வென்றார் விஸ்வநாதன். இவரின் 4 ஆவது சாம்பியன் பட்டம் இது. (2000, 2007 , 2008, 2010).
சாதனைகள்:
1983 - National Sub-junior Chess Champion
1984 - International Master
1985 - Indian National Champion
1987 - World Junior Champion
1988 - Grandmaster
2000 - Fide World Champion
2003 - Fide World Champion
2007 - Fide World Champion
2008 - Fide World Champion
2010 - Fide World Champion
விருதுகள்:
1985 - Arjuna Award
1987 - Soviet Land Nehru Award
1987 - Padmashri
1987 - National Citizens Award
1991 -92 - Rajiv Gandhi Khel Ratna Award
1995 - KK Birla Award
Five Chess Oscar Awards 1997, 1998, 2003, 2004, 2007 & 2009.
1995 - Padma Bhushan.
யார் யாருக்கோ பாராட்டும், விழாவும் நடத்துபவர்களே! இதோ இருக்கிறார்! உண்மையான சாதனையாளர். ஒரே ஒரு விழாவாவது எடுங்கப்பா!
மேற்கிந்தியத்தீவுகளின் வேகப்பந்துவீச்சு
வேகப்பந்துவீச்சைத் தனது அலங்காரமாகவும், அடையாளமாகவும் கொண்டிருந்தது மேற்கிந்தியத்தீவுகள். 1928 ல் முதல் டெஸ்ட். குரல்வளையைக் குறிவைக்கும் வேகப்பந்துக் கூட்டணி ஆரம்பித்தது 50 களுக்குப் பிறகுதான். வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்த பார்வை. (ஸ்பின் தனி இடுகையாக விரைவில்!)
இரண்டாம் இன்னிங்ஸ்
3. ஒருநாள் போட்டிகள்:
மேற்கிந்தியத்தீவுகளின் ஒருநாள் போட்டி வரலாறு. ஒருநாள் போட்டி தற்செயலாகத் துவங்கப்பட்டது. இயற்கையின் விளைவு என்றும் சொல்லலாம். இங்கிலாந்து ஆஸ்திரேலியா டெஸ்ட்டின் 3 நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டன. கிடைத்த நேரத்தில் போட்டியைக் கைவிடுவதற்குப் பதிலாக 40 ஓவர்கள் (ஓவருக்கு 8 பந்துகள்!) கொண்ட போட்டி நடத்தப்பட்டது. நடந்தது ஜனவரி 5, 1971. ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் போட்டிகள் பிரபலமடையத் துவங்கியிருந்த நேரம். மேற்கிந்தியத்தீவு வீரர்கள் ஹீரோக்களானது 1975 Prudential உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகுதான். ஜூன் 7 முதல் ஜூன் 21 வரை இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெற்றன. 60 ஓவர்கள், வெள்ளை யூனிஃபார்ம், சிவப்புப் பந்துகள். டென்னிஸ் அமிஸ் இந்தியாவுக்கெதிராக முதல் உலகக் கோப்பை சதமடித்தார். அதே ஆட்டத்தில் சுனில் கவாஸ்கர் 36 ரன்கள் (174 பந்துகள்) அடித்துப் புகழ் ? பெற்றார்.
முதல் இன்னிங்ஸ்
2. ஆரம்ப நாட்களில்...
அணியாக விளையாட ஆரம்பித்தது 1890 ல் இங்கிலாந்துக்கு எதிராக. டெஸ்ட் அந்தஸ்து இல்லாத காலம். 1926 ல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நான்காவது அணியானது. அப்போதும் நல்ல வீரர்களைக் கொண்டிருந்தாலும் தொடர் வெற்றிகளைப் பெறாத சாதாரண அணியாக இருந்தது. அன்றைய அணியில் வெள்ளை வீரர்கள் அதிகம் இருந்தனர். பெரும்பாலான மைதானங்களில் 1930 களிலிருந்து போட்டிகள் நடத்தப்பட்டன.
1960 களில் துவங்கியது மேற்கிந்தியத்தீவுகளின் சாதனைப் பயணம். இப்போது கறுப்பினத்தவர் வெள்ளையர்களை இடம்பெயர்த்தனர். அறிவிக்கப்படாத உலகச் சாம்பியன்களாக 90 களின் ஆரம்பம் வரை திகழ்ந்தனர். 60 களில் நான்முனை வேகப்பந்து வீச்சுத் தாக்குதல் இல்லை. பேட்ஸ்மேன்களின் திறமையால் சாதித்துக் கொண்டிருந்தது.
ஆமைவேக ஆட்டமாக இருந்தன டெஸ்ட் போட்டிகள். ஒருநாள் போட்டிகள் 70 களில் அறிமுகம். டெஸ்ட் வெற்றியே இன்றுவரை அணியின் அந்தஸ்து. வருடத்திற்கு ஒரு அணி 5 முதல் 7 டெஸ்ட் விளையாடும். இப்போது ! மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் வரலாற்றுக்கான அறிமுக இடுகை. ஒருநாள் போட்டிகள், முக்கியமான ஆட்டங்கள், வீரர்கள் குறித்துப் பிற்பாடு.

மேற்கிந்தியத் தீவுகளின் குரல்
1. டோனி கோஸியர், (Tony Cozier). காயப்படுத்தாத நகைச்சுவையுடன் அற்புதமாக கிரிக்கெட்டை வர்ணிக்கும் குரல்.1965 , மேற்கிந்தியத்தீவுகள் - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராகத் துவங்கி இன்று மேற்கிந்தியத் தீவுகளின் குரலாகப் பரிணாமம் அடைந்திருக்கும் இவரைக் குறிப்பிட்ட பின்பு மற்ற வீரர்களை எழுதுவதே முறை. (மேற்கிந்தியத்தீவுகள் குறித்த எனது தொடரின் முதல் அத்தியாயமாகக் கொள்க!)
ஜூலை 10, 1940 ல் பார்படோஸில் (Barbados) பிறந்தார். ஹாக்கி மற்றும் கிரிக்கெட் பார்படோஸ் கிளப்பில் விளையாடினார். தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படாதது இவரைப் பாதிக்கவில்லை. இன்றும் கிரிகெட்டோடு நேரடித் தொடர்புடையவர். 1958 முதல் கிரிக்கெட்டை எழுதத் தொடங்கி 1965 முதல் வர்ணனையாளர்.
ஜூலை 10, 1940 ல் பார்படோஸில் (Barbados) பிறந்தார். ஹாக்கி மற்றும் கிரிக்கெட் பார்படோஸ் கிளப்பில் விளையாடினார். தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படாதது இவரைப் பாதிக்கவில்லை. இன்றும் கிரிகெட்டோடு நேரடித் தொடர்புடையவர். 1958 முதல் கிரிக்கெட்டை எழுதத் தொடங்கி 1965 முதல் வர்ணனையாளர்.
கல்லூரிப் பேராசிரியர் போன்ற தோற்றம். கல்லூரி மாணவனைப் போலவும் வர்ணிப்பார். இவரது பாராட்டால் புகழ்பெற்ற மேற்கிந்தியத்தீவு வீரர்கள் பலர். வீரர்கள் தங்களைத் திருத்தி மேம்படுத்திக் கொள்ளும் விதமாய் ஆரோக்கிய விமர்சனம் செய்வார். தவறுகளைச் சுட்டிக் காட்டவும் தயங்கியதே இல்லை.
மேற்கிந்தியத்தீவுகளின் கிரிக்கெட் கப்பலுக்கு டோனி கலங்கரை விளக்கம். கிரிக்கெட் பார்க்கும் மக்கள் அனைவராலும் விரும்பப்படும் வீரர் இருக்கிறாரா தெரியாது. அனைவராலும் விரும்பப்படும் வர்ணனையாளர் இவரே!
கிரிக்கெட்டில் 70 களிலிருந்து 90 களின் பாதிவரை மேற்கிந்தியத்தீவுகளின் முத்திரை ஆழமானது. ஆனால் இன்றைய நிலை, அற்புதமான ஓவியம் சிறுகச் சிறுகச் சிதிலமடைந்தது போன்றது. வெற்றிகளை அசாதாரணமாகப் பெற்றுவந்த அணி, இன்று சிறுவெற்றிகளுக்காக ஏங்குகிறது. ரிச்சர்ட்ஸ் போன்ற தேவதூதர்களுக்காகக் காத்திருக்கிறது.
1890 லிருந்து துவங்குகிறது இவர்களின் கிரிக்கெட் வரலாறு. 1928 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்து பெற்றது. West Indies Cricket Board (WICB) கிரிக்கெட்டின் நிர்வாக அமைப்பு. Antigua and Barbuda,Barbados,Dominica,Grenada,Guyana,Jamaica,Saint Kitts and Nevis,Saint Lucia,Saint Vincent and the Grenadines,Trinidad and Tobago போன்ற சிறுதீவுகளிலிருந்து வீரர்கள் தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
5 முறை விம்பிள்டன் சாம்பியன் ரோஜர் ஃபெடரர் 7 ஆவது இறுதியாட்டத்தில் விளையாடுகிறார். வென்றால் அதிக Grand Slam பட்டங்களை வென்றவராவார். வாழ்த்துக்கள்.
மேற்கிந்தியத் தீவுகள்
கரீபியன் , உச்சரிக்கும்போதே உற்சாகம் தரும் இடம். அந்தந்த வினாடிகளில் வாழும் கறுப்பு வைரங்கள். இயற்கையின் மொத்த ஆசீர்வாதங்களும் வெஸ்ட் இண்டீசுக்குத்தான். உலக அரங்கில் அம்மக்களின் பங்களிப்பு எனக்குத் தெரியாது. ஆனால் கிரிக்கெட்டில் அவர்களது அழகான ஆதிக்கம் நம்மில் பலர் அறிந்ததே. அந்த நல்ல நாட்களையும், ஆட்களையும் நினைவுகூறும் வகையில் மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறேன்.
கிரிக்கெட்டில் 70 களிலிருந்து 90 களின் பாதிவரை மேற்கிந்தியத்தீவுகளின் முத்திரை ஆழமானது. ஆனால் இன்றைய நிலை, அற்புதமான ஓவியம் சிறுகச் சிறுகச் சிதிலமடைந்தது போன்றது. வெற்றிகளை அசாதாரணமாகப் பெற்றுவந்த அணி, இன்று சிறுவெற்றிகளுக்காக ஏங்குகிறது. ரிச்சர்ட்ஸ் போன்ற தேவதூதர்களுக்காகக் காத்திருக்கிறது.
1890 லிருந்து துவங்குகிறது இவர்களின் கிரிக்கெட் வரலாறு. 1928 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்து பெற்றது. West Indies Cricket Board (WICB) கிரிக்கெட்டின் நிர்வாக அமைப்பு. Antigua and Barbuda,Barbados,Dominica,Grenada,Guyana,Jamaica,Saint Kitts and Nevis,Saint Lucia,Saint Vincent and the Grenadines,Trinidad and Tobago போன்ற சிறுதீவுகளிலிருந்து வீரர்கள் தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
செரீனா - விம்பிள்டன் சாம்பியன்
செரீனா வில்லியம்ஸ் 2009 விம்பிள்டன் சாம்பியன். மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்ஸை 7 -6 , 7 - 3 , 6 -2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வென்றுள்ளார். இவர்கள் 8 முறை இறுதியாட்டத்தில் சந்தித்ததில் 6 முறை செரீனா வென்றுள்ளார். வாழ்த்துக்கள் செரீனா!
5 முறை விம்பிள்டன் சாம்பியன் ரோஜர் ஃபெடரர் 7 ஆவது இறுதியாட்டத்தில் விளையாடுகிறார். வென்றால் அதிக Grand Slam பட்டங்களை வென்றவராவார். வாழ்த்துக்கள்.
இறுதியாக வென்றது இங்கிலாந்து.....
ஆடவர் அணியால் இயலாததை மகளிர் அணி சாதித்திருக்கிறது. வாழ்த்துக்கள். (அடிக்கடி இறுதிப் போட்டிவரை வந்து உறுதியிழக்கும் அணி!) கிரிக்கெட்டின் இல்லமாகக் கருதப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் T20 உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் நியூஸிலாந்து அணியை வென்றது இங்கிலாந்து.
அவர்கள் தேசிய விளையாட்டு இன்னும் பிரபலமடையும். குறிப்பாக மகளிர் மத்தியில். தொடர் நாயகி (வார்த்தை சரியா?) க்ளாரி வெற்றிக்கான ரன்னை அடித்தது சிறப்பு. மகளிர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சாதித்தார் சாய்னா....!
வாழ்த்துக்கள் சாய்னா! ஜகார்த்தா, இந்தோனேஷியாவில் நடைபெற்ற Super Series tournament ல் வென்ற முதல் இந்தியர். சாய்னா வென்ற சீனாவின் லிங்வாங் இவரைவிடத் தரவரிசையில் முன்னால் உள்ளவர். 49 நிமிடப் பரபரப்பான ஆட்டத்தில் 12-21, 21-18, 21-9 என்ற கணக்கில் Shuttler சாம்பியன். கடந்த வாரம் சிங்கப்பூரில் இதே வீரரிடம் தோற்றதற்குப் பதிலடி இப்போது!
முன்பு, பிரகாஷ் படுகோன் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் முக்கியமான பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளனர். மகளிர் பிரிவில் இவரது வெற்றி சிறப்பான இந்திய வெற்றிகளில் ஒன்று. தரவரிசையில் எட்டாம் இடத்திலிருந்து இப்போது மூன்றாம் இடம். இரண்டு லட்சம் பரிசளிக்கிறது, Badminton Association of India (BAI).
இந்திய இளம்பெண்களை Shuttle விளையாட்டைக் கவனிக்க வைக்கும் வெற்றியைத் தந்திருக்கிறார் சாய்னா. விளம்பரதாரர்களும், கிரிக்கெட் மட்டுமல்லாது இதர இந்திய விளையாட்டுகளுக்கும் செலவழிக்க முன்வரும் நிறுவனங்களும், அரசியல் கலக்காத தேர்வுக்குழுவும் கிடைத்தால் இன்னும் பல இளம்திறமைகள் இந்தியாவிலிருந்து கிடைப்பார்கள். எப்படியிருந்தாலும், தேசம் பெருமைகொள்ளத்தக்க வெற்றியைத்தந்த சாய்னாவுக்கு்ம்,பயிற்சியாளர்களுக்கும், உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கும் மீண்டும், மீண்டும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்!
T20 - பாகிஸ்தான் உலகச் சாம்பியன்...
முதலில் பாகிஸ்தான் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 2009 T20 கிரிக்கெட் சாம்பியன். தேசம் சிறிது சிறிதாய்ச் சிதறிக் கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இது மகத்தான தருணம். முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் , “ பாகிஸ்தானைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். எந்த அணியையும் வெல்ல வல்லது” என்றார். அவர் வாக்கு அப்படியே பலித்திருக்கிறது.
இன்று நேற்றல்ல. அவர்கள் விளையாடத் துவங்கியதிலிருந்தே கணிக்க முடியாத அணி என்ற பெயர் பெற்றவர்கள். இன்றுவரை அப்படித்தான். நண்பர்கள் பலரும் இலங்கை வெல்லும் ( வெல்ல வேண்டும் ) என்றார்கள். முடிவு தலைகீழாக. அந்த நாட்டுக் காயங்களுக்கு சிறு மருந்தாக இந்த வெற்றி அமையலாம். வெற்றிக் கொண்டாட்டத்தில் தீவிரவாதத்தை வெல்வது பற்றியும் அவர்கள் யோசித்தல் அவசியம். மீண்டும் வாழ்த்துக்கள்.
இன்னொரு இந்தியச் சாதனை!
மலேசியாவிற்கெதிரான அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியில் இந்தியா 13 வருடங்களுக்குப் பிறகு வென்றுள்ளது. ஐந்து நாடுகள் பங்கேற்றன. ஆட்டம் தொடங்கிய 8 ஆவது நிமிடத்தில் அர்ஜுன் ஹாலப்பாவும், 20 ஆவது நிமிடத்தில் ப்ரப்ஜோத் சிங்கும், 41 ஆவது நிமிடத்தில் ஷிவேந்தர் சிங்கும் அடித்த கோல்கள், 3 -1 என்ற கணக்கில் எதிரணியை வீழ்த்தின.
சென்ற வருடம் அர்ஜெண்டினா அணியிடம் 1 - 2 என்ற கணக்கில் தோல்வியுற்ற இந்தியா, இம்முறை மலேசிய அணியினரின் தடுப்பாட்ட உத்திகளைத் தகர்த்து வென்றுள்ளது. மலேசிய அணியை இந்தியா கடைசியாக 1985 ல் இறுதிப் போட்டியில் வெற்றி கொண்டது. அஸ்லான் ஷா கோப்பையை வெற்றியை இந்தியா கடைசியாகப் பெற்ற ஆண்டு, 1995.
இந்தியப் பயிற்சியாளர் திரு. ஹரேந்திரா சிங் “ கட்டாயம் பெற வேண்டிய வெற்றி. எங்களது அடுத்த இலக்கு மே மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை. “ எனத் தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பைக்கும் நமது வாழ்த்துக்கள்!
கிரிக்கெட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் 10 சதவிகிதம் தந்தாலே அதிகம் சாதிக்கும் நமது ஹாக்கி அணி. தேசிய விளையாட்டை தேயவிடுவதுதான் தேச அவமானம். நேற்று பிறந்த ஐ.பி.ல் அணிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், ஹாக்கியைப் பற்றியும் சிந்திக்கலாம். அரசாங்கமும் போதிய உதவிகளைச் செய்தால் இன்னும் பல வெற்றிகளும், சாதனைகளும் சாத்தியப்படும். Chak De ! India !