சட்டசபை தேர்தலுக்கு கட்சியினர் தயாராகுவதற்கும், தொண்டர்களுக்கு, "உற்சாக டானிக்' அளிக்கவும், புத்தாண்டில் புதிய அரசு அமைப்பதற்குரிய சூளுரை ஏற்கும் வகையில், வரும் 30ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழு பரபரப்பாக கூடுகிறது. தங்களது கூட்டணியில் இடம்பெறப் போவது காங்கிரசா அல்லது தே.மு.தி.க.,வா என்பதை ஜெ., பொதுக்குழுவில் அறிவிக்கவுள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் மே முதல் வாரம் நடக்கவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பணியை துவங்கியுள்ளன. எப்போதும் மற்ற கட்சிகளை காட்டிலும், ஒருபடி முன்னதாகவே தேர்தல் பணியை துவக்குவது அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் வழக்கம்.அந்த வகையில், வரவுள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணியை முடிவு செய்வது, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அனைத்து பணிகளையும் வேகமாக முடித்து, மாநிலம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்ள ஜெ., திட்டமிட்டுள்ளார்.
இதற்கு அச்சாரம் போடும் வகையில், சென்னையை அடுத்த வானகரத்தில், வரும் 30ம் தேதி அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது. இந்த பொதுக்குழுவில், மண்டல வாரியாக மாவட்டச் செயலர்கள், அமைப்பு செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமை நிலைய பேச்சாளர்கள் சிலர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது குறித்த முடிவை அறிவிக்க ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் வழங்கி, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதோடு, தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், பிப்ரவரியிலிருந்து விருப்ப மனுக்களை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பிப்பதற்குரிய அறிவிப்பும் பொதுக்குழுவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது குறித்த முடிவை அறிவிக்க ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் வழங்கி, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதோடு, தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், பிப்ரவரியிலிருந்து விருப்ப மனுக்களை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பிப்பதற்குரிய அறிவிப்பும் பொதுக்குழுவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
விண்ணப்ப மனுக்கள் ஒரு மாதம் வரை பெறுவதற்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்படுகிறது. மார்ச்சுக்குள் கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு முடிந்த பின், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடத்தப்படுகிறது.அமைப்பு ரீதியாக உள்ள 45 மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளை, தொகுதிக்கு மூன்று பேரிடம் நேர்காணல் நடத்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். நேர்காணல் நடத்தும் பணியை ஏப்ரலுக்குள் முடித்து விட்டால் தான், தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரத்திற்கு தயாராக முடியும். எனவே, தேர்தல் பணிகளை துவக்குவது குறித்த முக்கிய அறிவிப்புகளும், பொதுக்குழுவில் இடம் பெறும் என கட்சியினர் கருதுகின்றனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மையப்படுத்தி, தி.மு.க., அரசை கண்டித்து, பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. முன்னதாக நடக்கும் செயற்குழு கூட்டத்திலும், சட்டசபை தேர்தல் பற்றிய முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலுக்கு முன், பொதுக்குழு கூடுவதால் கூட்டணி குறித்த முக்கிய முடிவை ஜெயலலிதா அறிவிப்பார் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். காங்கிரசுடன் கூட்டணியா அல்லது தற்போதுள்ள கூட்டணியுடன் தே.மு.தி.க.,வையும் சேர்த்து அணி அமையப் போகிறதா என்பதை பொதுக்குழுவில் ஜெ., தெளிவுபடுத்தவுள்ளார்.இந்த தேர்தலில் கிடைக்கும் வெற்றி தான், ஜெயலலிதாவின் நீண்ட கால அரசியல் வாழ்க்கைக்கு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், பொதுக்குழுவில் உணர்ச்சிகரமாக பேசி, தொண்டர்களுக்கு ஜெ., உற்சாகத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Download As PDF
0 comments:
Post a Comment