Widget By Devils Workshop
புதிய இடுகைகள் விரைவில் vanakkam

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text





என்னுடைய மற்ற தளங்கள்


1. கிரிக்கெட்


2. உடுமலைப்பேட்டை


3. மொபைல் ட்ரிக்ஸ்


4. தமிழ் தகவல்


5. இயற்பியல்


6. கோவை மண்டலம்


7. பாடல்

அனைவரையும்வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்

Clipart

திருக்குறள்

Sunday, August 15, 2010

மதுரை

மீனாட்சி அம்மன் கோயில் - மதுரை 

சற்றே பெரிய இடுகை. பொறுமையாய் அனைத்தையும் வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

”ஆத்தா மீனாச்சி. நான் கேட்டத தரலன்னா இனிமே உன்னோட பேசமாட்டேன்” இவ்வாறு உரிமையோடு ஒருமையில் பிரார்த்திக்கும் பக்தர்களைப் பார்க்க முடிகிற ஆலயம். நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்றது மகிழ்ச்சியான தருணம். கோயிலின் தெற்குக் கோபுரத்திலிருந்து சுற்றி வந்து எடுத்த படங்கள் இவை. எடுக்கப்படாத பகுதிகள் ஏராளம்.

சங்கம்வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகர் மீனாட்சியம்மன் ஆலயத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நகரம். பரிபாடல், மதுரையைத் தாமரை மலராகவும், மீனாட்சி ஆலயத்தை மொட்டாகவும், சுற்றியுள்ள வீதிகளை மலரின் இதழ்களாகவும் வர்ணிக்கிறது.

நகருக்குள் நுழைந்ததுமே ஆலயத்தின் கோபுரங்கள் வரவேற்கின்றன. அன்னை மீனாட்சிக்கே முதல் வழிபாடு. எனவே கோயிலுக்குச் செல்பவர்கள் கிழக்கு வீதியிலுள்ள அம்மன் சன்னிதி வழியாகச் செல்வது வழக்கம்.

அஷ்டசக்தி மண்டபம்: அம்மன் சன்னிதியின் முன்பகுதி. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களிடையே மீனாட்சி கல்யாணம் கதைவடிவில் காட்சியளிக்கிறது. உள்ளிருக்கும் 8 பெருந்தூண்களிலும் அஷ்டசக்திகளின் சிலைகள் அழகுசெய்கின்றன. திருவிளையாடல் புராணக் காட்சிகள் நிறைந்த இம்மண்டபத்தில் மீனாட்சி, சமயக்குரவர், துவாரபாலகர், விநாயகர் மற்றும் சுப்ரமணியர் சிலைகளும் உள்ளன.

மீனாட்சி நாயக்கன் மண்டபம்: மேலே யாளியும், கீழே சிறுசிற்பங்களும் நிறைந்த ஆறுவரிசைத் தூண்கள் இம்மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இம்மண்டபத்தையும், அஷ்டசக்தி மண்டபத்தையும் இணைக்கும் சிறுமண்டபத்தையும் வேடன், வேட்டுவச்சி சிலைகள் உள்ளன. மண்டபத்தின் மேற்குக் கோடியில் ஆயிரத்தெட்டு சிறு விளக்குகளைக் கொண்ட பித்தளையில் ஆன திருவாட்சி கண்களை கவர்கிறது. முதலிப்பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், கம்பத்தடி மண்டபம் ஆகியவையும் காண வேண்டியவை.

பொற்றாமரைக் குளம்: உலகப் பொதுமறை திருக்குறள் இங்கு வைத்துத்தான் சங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்கிறது வரலாறு. குளம், நீண்ட சதுர வடிவில், அழகிய படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. வடக்குக் கரையிலுள்ள தூண்களில் சங்கப்புலவர்கள் 24 பேர்களின் சிலைகளைக் காணலாம். இரு தூண்களில் கோயிலை முதன்முதலில் கண்ட தனஞ்சயன் என்னும் வணிகனும், கோயிலையும், நகரையும் நிர்மாணித்த குலசேகரப் பாண்டியனும் காட்சியளிக்கின்றனர். சுவற்றில் திருவிளையாடற் புராணக் காட்சிகள் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.

கிழக்குக் கரையில் நின்றுபார்த்தால் சுவாமி, அம்மன் கோயில்களின் தங்க விமானங்களைத் தரிசிக்கலாம். தெற்குக்கரை மண்டபச் சுவற்றில் திருக்குறள் முழுவதும் வெண்சலவைக் கற்களில் பதிக்கப் பெற்றுள்ளது.

மீனாட்சி அம்மன்: அம்மன் கோயிலுக்கு இரு பிரகாரங்கள் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் தங்கக் கொடிமரம், திருமலை நாயக்கர் மண்டபம், விநாயகர், கூடற்குமரர் சன்னிதிகள், செம்பால் ஆன இருபெரும் துவாரபாலகர்கள் ஆகியவை உள்ளன. கூடற்குமரர் சன்னிதியில் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஆறுகால் பீடத்தில்தான் குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றப்பட்டது. இதன் வாயிலாக அம்மன் கோயில் மகாமண்டபத்தை அடையலாம்.

சுந்தரேஸ்வரர் சன்னிதி: சன்னிதிக்கு இருபுறமும் 12 அடி உயரமுள்ள துவாரபாலகர்கள் நிற்கின்றனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் சிறு உருவங்களையும் காணலாம். உள்ளே முதல் பிரகாரத்தில் திருவிளையாடற் புராணம் அரங்கேற்றப்பட்ட ஆறுகால் பீடம் இருக்கிறது. அதில் செப்பால் ஆன துவாரபாலகர் சிலைகள் உள்ளன. சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்களையும், கலைமகள் கோயிலையும் காணலாம். உற்சவ மூர்த்தி, காசி விசுவநாதர், பிட்சாடனர், சித்தர், துர்க்கை ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. தல விருட்சமான கடம்ப மரம், கனகசபை, யாகசாலை, இரத்தின சபை, சாட்சி கூறிய வன்னி கிணறு ஆகியவையும் இந்தப் பிரகாரத்தில் இருக்கின்றன.


கோபுரங்கள்: சுவாமி, அம்மன் கோயில்களை வலம்வரும் முற்றம் ஆடிவீதி. இங்கு கோயிலின் நான்கு பெரிய 9 நிலைக் கோபுரங்கள் உள்ளன. தெற்குக் கோபுரம் மற்ற கோபுரங்களைவிட உயர்ந்தது. உயரம் 160 அடி. இதன் பக்கங்கள் சற்று வளைந்திருப்பது கூடுதல் அழகு. மதுரை நகருக்கு வருபவர்களை வரவேற்கும் கோபுரமும் இதுவே. வடக்குக் கோபுரத்தில் சுதைகள் குறைவு. எனவே மொட்டைக் கோபுரம் எனப்படுகிறது. கிழக்குக் கோபுரம் மிகப் பழமையானது. இதன் உயரம் 153 அடி.

தவிர, சித்திரக் கோபுரம், வேம்பத்தூர் கோபுரம், நடுக்கட்டுக் கோபுரம், இடபக்குறியிட்ட கோபுரம் முதலான பல சிறிய கோபுரங்களும் சிறப்பானவை. வடக்கு ஆடிவீதியில், பெரிய கோபுரத்தை அடுத்து ஐந்து இசைத்தூண்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 22 சிறு தூண்களைக் கொண்டது. தட்டினால் விதவிதமான இன்னிசை எழுப்புகின்றன இந்த அதிசயத் தூண்கள்.

புது மண்டபம்: கோயிலுக்கு வெளியே, கிழக்குக் கோபுரத்துக்கு எதிரில் வசந்த மண்டபம் என்னும் புது மண்டபம் உள்ளது. தடாதகை, மீனாட்சி கல்யாணம் , திருவிளையாடற் புராணம் போன்றவை அழகிய சிற்பங்களாக உள்ளன.கரும்பு தின்னும் கல்யானை, இராவணன் கயிலையைத் தூக்குவதும் சிற்பக்கலையின் சிறப்புக்கு சான்றுகள். இன்றைய தினங்களில் பள்ளி, கல்லூரிப் புத்தகங்கள் கிடைக்கும் மண்டபம்.

கோயில் மாநகர்: அறுபத்துநான்கு சக்திபீடங்களில் முதல்பீடம் மதுரை. வெளிநாட்டவர்களின் முதல்நாட்டம் மீனாட்சி அம்மன் ஆலயம். வானளாவிய கோபுரங்களையும், சிற்பங்களையும் பற்றி நான் சொல்லியிருப்பது வெகுசொற்பமே. பாண்டிய மன்னர்கள் தமிழகத்துக்குத் தந்த ஒப்பற்ற கலைப் பொக்கிஷம் இந்த ஆலயம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றால், ஆலயம் காப்பது அதனினும் நன்று. ஆலயம் குறித்த மற்றொரு இடுகை விரைவில்!

(சற்றே பெரிய) டிஸ்கி: எனது 200 ஆவது இடுகை. மனநிறைவைத் தந்த இடுகைகளுள் ஒன்று. இன்றுவரை நான் பேசி,எழுதிப், படிக்கும் தமிழுக்கு ஆயிரம் கோடி நன்றிகள். பக்கம்தந்த கூகிளுக்கும், பக்கம்வந்த அனைவருக்கும் நன்றி. திரட்டிகள், வந்தவர்களைக் கண்டறிந்து சொல்லும் தளங்கள், எனது பக்கத்தைப் பின்பற்றுபவர்கள், வலைப்பூ எழுதிய, எழுதிக்கொண்டிருக்கும், எழுத இருக்கும் அனைவருக்கும் நன்றிகள். பின்னூட்டமிட்டவர்கள், பெயரில்லாமல் திட்டியவர்கள், தொடர்பதிவுக்கு அழைத்தவர்கள், பதிவர்சந்திப்பில் கிடைத்தவர்கள் என யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவராலும்தான் எனது 200 ஆவது இடுகை சாத்தியமாயிற்று. இன்னும் ஏதேனும் சாதித்தால் அதற்கும் எனது தமிழும், மேலே குறிப்பிட்ட உயர்ந்த உள்ளங்களுமே காரணம்!








திருமலை நாயக்கர் மஹால் - மதுரை

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரால் கி.பி.1636 ல் கட்டப்பட்டது. இந்து, முஸ்லீம் கட்டிட நுட்பங்கள் சேர்த்து அமைக்கப்பட்ட (இந்தோ-சாரசீனிக் முறைப்படி) அரண்மனை. அன்றைய அரண்மனையில் சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என்ற இரு பிரிவுகள் இருந்தன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடம்; ரங்க விலாசம் மன்னரின் தம்பி முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடம்.

இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.

முற்றத்தின் வழியாக உள்ளே நுழைந்தும் ஒரு பெரும் முற்றவெளியும் சுற்றிலும் உயரமான தூண்கள் தாங்கிய கட்டடமும் உள்ளன. மேற்கில் வேலைப்பாடுடைய ஒரு கட்டப் பகுதி உள்ளது.

முற்றத்தின் வடக்கிலும் தெற்கிலும் நடுவில் சாலை வடிவமான மிகவும் உயர்ந்த கட்டப் பகுதிகள் இருக்கின்றன. இவற்றின் ஸ்தூபிகளும் பொன்னால் செய்யப்பட்டிருந்தன. தாங்கும் சட்டங்கள் இல்லாத அந்த குவிந்த கூரை கட்டடக்கலையில் ஒரு மைல் கல்.

இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகளின் வழியே, மேற்கில் எழில் வாய்ந்த பகுதியின் வழியாகக் காண்பது சொர்க்க விலாசம். மிகவும் நெடிய தூண்களும், எழிலார்ந்த சுதை வேலைப்பாடுகளும், குவிந்து மேலே தோன்றும் விமானங்களும் கலைத் திறனின் மேதைமைகள். இப்பகுதியின் நடுவில் மிகவும் விசாலமான இடமும், அதன் மேல் கவிந்து உயர உயரச் செல்லும் விதானமும் நாம் சொர்க்கத்தில் நிற்கிறோமோ என்னும் வியப்பைத் தோற்றுவிப்பதால் சொர்க்க விலாசம் என்ற பெயர்.


இவ்விடத்தில் கல்பீடத்தின் மேல் நடுவில் யானைத் தந்தத்திலான நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த ஒரு மண்டபம் வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் இரத்தினங்களால் செய்யப்பட்ட அரியணை இருந்தது. அதன் மீதமர்ந்துதான் திருமலை மன்னன் செங்கோல் நடத்தினான்.

இன்றைய மஹாலில் ரங்கவிலாசம் இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் இருந்த பகுதி. பத்து எழிலான தூண்கள் முகப்பிலும், தூண்களில் நுண்ணிய வேலைப்பாடுகளும் அமைந்து கம்பீரமாகத் திகழ்ந்த இடம். ஆயுதங்களும், பல்வகை இசைக்கருவிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதி. 1853 ல் பழுதுபார்த்தும் காப்பாற்ற இயலாமல் போனது நமக்கெல்லாம் இழப்பே!
மண்டபத்தைச் சுற்றி 900 அடி நீளமும், 600 அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்டு விளங்கிய சுற்று மதில் சுவரும் இப்போது இல்லை. மிகப் பலவீனமாக இருந்ததால் 1837 ல் இடிக்கப்பட்டது. மதிலுக்கு வெளியில் இருந்த நந்தவனமும், அதன் மையத்தில் இருந்த கட்டிடமும் நாம் இழந்துவிட்ட செல்வங்கள்.

இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதையைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே இந்தப் பாதையைப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

திருமலை மன்னன் தந்த மஹாலில் ஐந்தில் ஒருபகுதிதான் தற்போது இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள். தயவுசெய்து இருப்பதைக் காப்போம்.






Download As PDF

மொத்தம் எத்தனை பதிவுகள்

share

e-referrer

படிப்பவர்கள்

online counter

FeedBurner FeedCount

மேலே

Click to go to top
Click to comment

தொடர்பு கொள்ள

Map

flag counter

free counters

map

Photobucket