காந்தி மண்டபம் - கன்னியாகுமரி
கன்னியாகுமரி கடற்கரையின் சமீபத்திய கட்டிடக் கலை நுணுக்கத்தோடு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கும் காந்தி மண்டபம் காண வேண்டிய இடம். தேசத்தந்தை காந்தியின் அஸ்தி கடலில் கரைக்கப்படுவதற்குமுன் இங்கு வைக்கப்பட்டிருந்தது. அவரது இளமைக்காலம் முதல் பல அரிய புகைப்படங்கள் சுற்றுவட்டமாய் மாட்டப்பட்டிருப்பது சிறப்பு.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு காந்தியின் அஸ்தி கொண்டுவரப்பட்டுக் கடலில் கரைக்கப்பட்டது. இந்த நினைவு மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2-ந் தேதி அபூர்வ சூரிய ஒளி விழுகிறது! 12 மணிக்கு விழும் ஒளி, 12:10 வரை நீடிக்கும். பிற நாட்களில் சூரிய ஒளி இவ்வாறு விழுவதில்லை. படங்களே போதுமான செய்திகளைச் சொல்வதால் இதற்குமேல் சொல்வதற்கு ஏதுமில்லை.
Download As PDF